பான் கார்டு தொலைந்துவிட்டதா? புதிய பான் கார்டு பெறுவது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2019

பான் கார்டு தொலைந்துவிட்டதா? புதிய பான் கார்டு பெறுவது எப்படி?



தற்போது டூப்ளிகேட் பான் கார்டு அல்லது பழைய பான் கார்டில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றாலும் ஆதார் எண் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

பான் கார்டில் உள்ள நிரந்தரக் கணக்கு எண் வங்கிகணக்கு, வருமான வரி தாக்கல், பிஎஃப் விதிடிராவ் போன்ற காரணங்களுக்குக் கட்டாயமாக உள்ளது.அது மட்டும் இல்லாமல் 10 இலக்கம் கொண்ட இந்தப் பிளாஸ்டிக் பான் கார்டை ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுத்த முடியும்.இப்படிப் பல்வேறு வகையில் உதவும் பான் கார்டை தொலைத்துவிட்டால் என்ன செய்வது என்று பலருக்கும் தெரியாது. எனவே பான் கார்டு தொலைந்துவிட்டால் புதிய பான் கார்டு பெறுவது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.உங்களுடைய பான் கார்டு என் மறந்துவிட்டால் வருமான வரித் துறை இணையதளத்தில் உள்ள ‘Know Your PAN’ என்ற சேவை மூலமாகப் பான் விவரங்களைப் பெற முடியும்.வருமான வரி இணையதளத்தில்

 https://www1.incometaxindiaefiling.gov.in/eFilingGS/Services/VerifyYourPanDeatils.html

என்ற இணைப்பிற்குச் செல்ல வேண்டும்.பின்னர் ‘verify your PAN’ என்ற படிவத்தைப் பூர்த்திச் செய்ய வேண்டும்.

இங்கு தந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடுவதன் மூலம் தங்களது பான் எண்ணை எளிதாகப் பெறலாம்.பான் எண் தெரியவந்த உடன் டூப்ளிகேட் பான் கார்டுக்கான கோரிக்கையை சமர்ப்பித்து புதிய கார்டை பெறலாம்.தற்போது டூப்ளிகேட் பான் கார்டு அல்லது பழைய பான் கார்டில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றாலும் ஆதார் எண் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பான் கார்டு நம்பர் மட்டும் வைத்துக் கொண்டு டூப்ளிகேட் பான் கார்டு பெறுவது எப்படி.

    ReplyDelete
  3. இங்கு கொடுக்கப்பட்டுள்ள link டுபாக்கூர். இதில் பான் எண் அவசியம் உள்ளீடு செய்ய வேண்டி உள்ளது. அப்படியே உள்ளீடு செய்தாலும் விவரங்கள் வரவில்லை.
    பான் எண் இருந்தால் நேரடியாக திருச்சி அலுவலகம் சென்று விண்ணப்பித்து பெறலாம். அல்லது இணையதளத்தின் மூலமாக பெறலாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி