தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்களின் அசல் சான்றிதழ்களை திருப்பி ஒப்படைக்க இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2019

தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்களின் அசல் சான்றிதழ்களை திருப்பி ஒப்படைக்க இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் அசல் கல்விச் சான்றிதழ்களை சம்பந்தப்பட்டவர்களிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டுமென அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள், ஊழியர்களின் கல்வி சான்றிதழ்களை சம்பந்தப்பட்டவர்களிடமே திருப்பி ஒப்படைக்கவேண்டுமென அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி பாதிக்கும்

சான்றிதழ்களை திருப்பி ஒப்படைத்தால் அந்த கல்வியாண்டின் இடையிலேயே பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாறிவிடக்கூடும். இதனால் மாணவர்களின் கல்வி முழுமையாக பாதிக்கும். மேலும் பொறியியல் கல்லூரிகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆய்வு செய்யும்போது ஆசிரியர்களின் அசல் கல்வி சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஏற்கெனவே 8 மாநிலங்களில்50 ஆயிரம் பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுவதாகவும், சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களில் போலியாக பணியாற்றி வருவதாகவும் அறிக்கை வெளியாகியுள்ளது. அதிகாரம் இல்லைதனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றுவோரின் அசல் கல்வி சான்றிதழ்களை அவர்களிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிடும் அதிகாரம் அண்ணாபல்கலைக்கழகத்துக்கு கிடையாது. எனவே பேராசிரியர்கள் மற்றும்ஊழியர்களின் அசல் சான்றிதழ்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பாக அண்ணா பல் கலைக்கழகம் 2 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி