தேர்தல் வருவதால், பள்ளி தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2019

தேர்தல் வருவதால், பள்ளி தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டம்?


தமிழகத்தில், பள்ளி பொதுத் தேர்வு மற்றும் இறுதி தேர்வுகள் முடிவடையும் தேதி குறித்து, இரண்டு நாட்களில், தேர்தல் கமிஷனில் தெரிவிக்கப்பட உள்ளது.லோக்சபா தேர்தல், மே மாதம் நடக்க உள்ளது. இதற்கான பணிகளில், தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது.

தேர்தல் வருவதால், பள்ளிதேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டு உள்ளது. அதன்படி, தேர்வுகள் அனைத்தும் முடிவடையும் தேதி குறித்து, பள்ளிக் கல்வித் துறையிடம், தேர்தல் கமிஷன், விபரம் கேட்டு உள்ளது.இது தொடர்பான அறிக்கையை, பள்ளிக்கல்வித் துறை தயார் செய்துள்ளது. பிளஸ் 2 - மார்ச், 19; பிளஸ் 1 - மார்ச், 29 மற்றும் 10ம் வகுப்பு - மார்ச், 29ல் பொதுத் தேர்வுகள் முடிவடைய உள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், மற்ற வகுப்புகளுக்கான, ஆண்டிறுதி தேர்வுகள், ஏப்., 20ம் தேதி முடிகின்றன. பின், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஏப்., 30 வரை கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், விடைத்தாள் திருத்தும் பணி நடத்தப்படுகிறது.இந்த பணிகள் முடிந்து, பிளஸ் 2க்கு, ஏப்., 19; பிளஸ் 1 - மே, 8 மற்றும் 10ம் வகுப்பு - ஏப்., 29ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இந்த விபரங்களும், தேர்தல் கமிஷனுக்கான அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

விடைத்தாள் திருத்தும் பணிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தேர்தல் தேதியை அறிவிக்குமாறு, தேர்தல் கமிஷனிடம் கேட்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி