கல்வி தரம் குறைய கல்விதுறை அதிகாரிகளே காரணம்: நீதிபதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2019

கல்வி தரம் குறைய கல்விதுறை அதிகாரிகளே காரணம்: நீதிபதி


தமிழகத்தில் கல்வி தரம் குறைய கல்வித்துறை அதிகாரிகளே காரணம் என ஐகோர்ட் கிளை நீதிபதி கூறினார்.

ஆசிரியை வசந்தி என்பவர் தன்னுடைய தலைமை ஆசிரியை பதவி உயர்வை கல்வி அதிகாரி அங்கீகரிக்கவில்லைஎன கூறி வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். வழக்கில் கல்வி அலுவலருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவுஒன்றை பிறப்பித்துள்ளது.

அதில் நீதிபதி தெரிவித்திருப்பதாவது:

தலைமை ஆசிரியையின் பதவி உயர்வை அங்கீகரித்து 2 வாரங்களில் பணப்பலன்களை வழங்க வேண்டும். வழக்கில்தென்காசி மாவட்ட கல்விஅலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. ரூ.10 ஆயிரம் அபராதத்தை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு 10 நாட்களில் வழங்க வேண்டும். அபராதம் விதிக்கப்பட்டதை அலுவலரின் பணி பதிவேட்டில் பதிய வேண்டும். மேலும் இது போன்ற உத்தரவு தவறு செய்யும் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் என நீதிபதி உத்தரவிட்டார்.

3 comments:

  1. முற்றிலும் உண்மை

    ReplyDelete
  2. Tamilnadu government must take care about recruitment of aided school teachers, in these kind of recruitment both aided school management and Education officers are making money illigally. I suffered lot because of these people.

    ReplyDelete
  3. Because of my caste I lost my job in Chennai in a school

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி