பள்ளி மாணவிக்கு திருமணம் நிறுத்திய தலைமையாசிரியை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2019

பள்ளி மாணவிக்கு திருமணம் நிறுத்திய தலைமையாசிரியை


புழல் பள்ளி மாணவிக்கு, பெற்றோரால் செய்து வைக்கப்பட இருந்த திருமணத்தை தடுத்து, அம்மாணவியை, தலைமையாசிரியை மீட்டார்.சென்னை, புழல் அடுத்த புத்தகரம், லட்சுமி நகரைச்சேர்ந்தவர் ஏழுமலை; திருவண்ணாமலை மாவட்டத்தைச்சேர்ந்த கட்டுமான தொழிலாளி.

அவரது மகள், புழல், லட்சுமிபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார்.இந்நிலையில் அவரை, உறவினருக்கு திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர் ஏற்பாடுசெய்தனர். நாளை, மாதவரத்தில் திருமணம் நடக்க இருந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தன் பள்ளி தலைமையாசிரியை, செல்ஷியா ஜெபராணியிடம் புகார் செய்தார்.'எனக்கு, பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைக்க, ஏற்பாடு செய்துள்ளனர்.

 திருமணம் வேண்டாம்; படிக்கவே விரும்புகிறேன்' எனக்கூறி அழுதார்.இதையடுத்து, தலைமையாசிரியை, இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தார்.கலெக்டர் உத்தரவைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள், மோரீஸ், மஞ்சுளா ஆகியோர், புழல் போலீசாருடன், நேற்று காலை, மாணவியின் வீட்டிற்கு சென்றனர்.அங்கு, மாணவி மற்றும் அவரது பெற்றோரிடம், குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என, விளக்கினர்.மேலும், மாணவியை, அண்ணா நகரில் உள்ள, பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். மாணவி மற்றும் தலைமையாசிரியையின் துணிச்சல் காரணமாக, குழந்தை திருமணம் தடுக்கப்பட்டது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி