ஏப்ரல் 18ம் தேதியை அரசு பொதுவிடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2019

ஏப்ரல் 18ம் தேதியை அரசு பொதுவிடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.


மக்களவை மற்றும் இடைத் தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்ரல் மாதம் 18ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 18ம் தேதியை அரசு பொதுவிடுமுறையாக அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணையைப் பிறப்பித்துள்ளது. ஏப்ரல் 18ம் தேதி வியாழக்கிழமையன்று தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு பொதுத் தேர்தலும், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெற உள்ளது.

இந்தியாவில் ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி