பொதுத்துறை வங்கியில் 181 சிறப்பு அதிகாரி வேலை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2019

பொதுத்துறை வங்கியில் 181 சிறப்பு அதிகாரி வேலை அறிவிப்பு.


பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான 'யூனியன் பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் 181 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்: 181
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Fire Officer - 01
பணி: Economist - 06
பணி: Security Officer - 19
பணி: Integrated Treasury Officers - 15
பணி: Credit Officers -122
பணி: Forex Officer -18
வயதுவரம்பு: 23 முதல் 40 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், பொறியியல் துறையில் பயர் இன்ஜினியரிங்கில் பிரிவில் பி.இ முடித்தவர்கள், பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், MBA, PGDBA, PGDBM, PGPM,  PGDM, CA, ICWA, CFA, FRM முடித்து ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விபரங்களை இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: புதுதில்லி, சண்டிகர், லக்னோ, கொல்கத்தை, பாட்னா, புவனேஸ்வர், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, போபால், மும்பை, நேவி மும்பை, கிரேட்டர் மும்பை, தானே, அகமதாபாத் 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:www.unionbankofindia.co.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.03.2019
மேலும் முழுமையான விவரங்கல் அறிய https://www.unionbankofindia.co.in/pdf/DETAILED-NOTIFICATION-ENGLISH-recruitment-110319.pdfஎன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி