அரசின், 'நீட்' பயிற்சி மார்ச் 25ல் துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2019

அரசின், 'நீட்' பயிற்சி மார்ச் 25ல் துவக்கம்


பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வுக்கான அரசின் இலவச பயிற்சி, வரும், 25ம் தேதி துவங்க உள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களில், அறிவியல் பாட பிரிவினர், மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இதற்கு, தனியார் மையங்களில், பல ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசுமற்றும் அரசு உதவி பள்ளி மாணவர்களுக்கு, அரசின் சார்பில், இலவச நீட் பயிற்சி வழங்கப்படுகிறது.

பொது தேர்வு, நேற்று முடிந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த, 4,000 மாணவர்கள், இலவசபயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, துாத்துக்குடி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில், உணவு, உறைவிட வசதியுடன், பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.பயிற்சி வகுப்புகள்,மார்ச், 25ல் துவங்க உள்ளன. இந்த வகுப்புகளில், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில், நீட் தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பாடங்கள் நடத்த உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி