தேர்தல் பணி செய்ய மறுத்த 26 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2019

தேர்தல் பணி செய்ய மறுத்த 26 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு


தேர்தல் பணி செய்ய மறுத்த 26 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த 26 ஆசிரியர்கள் தேர்தல் தொடர்பான பணிக்காக நியமிக்கப்பட்டு இருந்தனர். பூத் அளவிலான அதிகாரிகள் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

அதன்படி கடந்த ஆண்டு ஜூன் முதல் கடந்த பிப்ரவரி வரை அவர்கள் வாக்காளர் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பணிகளை செய்திருக்க வேண்டும்.ஆனால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் யாரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் பணிகளை செய்யவில்லை.இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.அதன்பேரில் போலீசார் தேர்தல் பணியை செய்ய மறுத்ததாக ஆசிரியர்கள் 26 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி