வனத் துறையில் தேர்வான 785 பேருக்கு பணி நியமன ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2019

வனத் துறையில் தேர்வான 785 பேருக்கு பணி நியமன ஆணை


தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வான 785 பேருக்கு பணி நியமன ஆணை  திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் வனத் துறையில் காலியாக உள்ள 300 வனவர்கள்,  726 வனக் காப்பாளர்கள், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தம் 2.10 லட்சம் பேர் எழுதினர்.

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதி, சான்றிதழ் சரிபார்ப்புப் பணி அண்மையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, வனக் காப்பாளர் பணியிடத்துக்கு 726 பேரும், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடத்துக்கு 59 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

வனத் துறை அமைச்சர் திண்டுக்கல்  சீனிவாசன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்  மல்லேசப்பா, சுற்றுச்சூழல்,  வனத் துறை சிறப்புச் செயலர் அப்பாஸ்,  வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் தலைவர் விஜயந்திரசிங் மாலிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

2 comments:

  1. இது உண்மையா ?? Call letter varaliya sir

    ReplyDelete
  2. Paulraj sir 7339422774 ithu ennda mobile No time iruntha call pannunga sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி