பதவி உயர்வு, பள்ளிகள் தரம் உயர்த்துவதால் ஏற்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை பொது கலந்தாய்வு மூலம் மட்டுமே நிரப்ப வேண்டும் - உயர் நீதிமன்ற கிளை உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2019

பதவி உயர்வு, பள்ளிகள் தரம் உயர்த்துவதால் ஏற்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை பொது கலந்தாய்வு மூலம் மட்டுமே நிரப்ப வேண்டும் - உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!


ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பாக புதிய விதிகளை வகுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. 2018ம் ஆண்டு நடந்த ஆசிரியர்கள் இடமாறுதலில் முறைகேடு நடந்ததாகவும், எனவே லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அதனை விசாரித்த நீதிபதிகள், முறைகேடு தொடர்பாக குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.மேலும், பொது கலந்தாய்வு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக இடமாறுதல் செய்வது தொடர்பாக பல்வேறு விதிகளையும் நீதிபதிகள் வகுத்துள்ளனர்.

பதவி உயர்வு, பள்ளிகள் தரம் உயர்த்துவதால் ஏற்படும் காலியிடங்களுக்கு பொது கலந்தாய்வு மூலம் மட்டுமே இடமாற்றம் வழங்க வேண்டும். கலந்தாய்வு மூலம் இட மாறுதல் பெறுபவர்களின் பட்டியலை இணைய தளங்களில் வெளியிட வேண்டும் போன்ற விதிமுறைகளை வகுத்து உத்தரவிட்டனர்.

 ​

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி