பொது தேர்வு முடிந்ததும் 'லேப்டாப்' கிடைக்கும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2019

பொது தேர்வு முடிந்ததும் 'லேப்டாப்' கிடைக்கும்


தமிழக அரசின் இலவச, 'லேப்டாப்'கள், பொது தேர்வு முடிந்த பின், பள்ளிகளில் வழங்கப்பட உள்ளன.

கடந்த,2018ல், பிளஸ் 2 முடித்தவர்கள், தற்போது, பிளஸ் 2, பிளஸ் 1 படிப்பவர்கள் என, மூன்று பிரிவினருக்கும், இந்த ஆண்டு, 'லேப்டாப்' வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.அதன்படி, 1,540 கோடிரூபாய் செலவில், 15.18 லட்சம், லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றை வழங்கும் நிகழ்ச்சியை, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று முன்தினம் துவங்கி வைத்தார். இதில், ஏழு மாணவியருக்கு மட்டும், லேப்டாப் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு, பள்ளிகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, லேப்டாப் வினியோகம், நேற்று துவங்க இருந்த நிலையில், பள்ளிகளுக்கு திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.'பொது தேர்வு துவங்கி விட்டதால், தற்போது, லேப்டாப் வழங்க வேண்டாம். மாணவரின் படிப்பு பாதிக்கப்படும் என்பதால், தேர்வு முடிந்த பின், லேப்டாப்களை வினியோகம் செய்யலாம்' என, முதன்மைக் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி