பிற மொழித் தேர்வர்களை விருப்ப மொழி தேர்வு எழுத அனுமதிக்க கூடாது: தமிழகதேர்வுத்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2019

பிற மொழித் தேர்வர்களை விருப்ப மொழி தேர்வு எழுத அனுமதிக்க கூடாது: தமிழகதேர்வுத்துறை உத்தரவு


தமிழ் தவிர்த்து பிற மொழிப் பாடங்களில் தேர்வு எழுதியவர்களை விருப்ப மொழிப்பாடத் தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது என்று தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை சார்பில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழிப்பாடம் தவிர்த்து பிற மொழிப் பாடங்களில் தேர்வு எழுதியவர்கள் இன்று (மார்ச் 23) நடைபெற உள்ள விருப்ப மொழிப் பாடத் தேர்வை எழுத கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. இந்த விவரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தேர்வு மையமுதன்மை கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்.அதற்கு மாறாக பிற மொழிப் பாடங்களில் தேர்வுஎழுதிய மாணவர்களை விருப்ப மொழித் தேர்வு எழுத அனுமதிக்கும் மைய கண்காணிப்பாளர்கள் மீதுதக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று மாலைக்குள்..

இதுதவிர இன்று நடைபெறும் விருப்ப மொழிப் பாடத் தேர்வுஎழுதும் தேர்வர்களின் எண்ணிக்கையை பாடவாரியாகவும், மாவட்ட வாரியாகவும் பட்டியலிட்டு மாலைக்குள் directordge.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி