அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2019

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்


தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்பொதுச் செயலர் ந. ரெங்கராஜன் வலியுறுத்தினார்.

ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு தமிழக அரசின் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. தேர்தலைக் காரணம் காட்டி தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

அகவிலைப்படி உயர்வு என்பது ஒரு வழக்கமான நடைமுறை ஆகும். இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுகிறபோது தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வெளியிடலாம். இதற்கான முன்மாதிரிகள் கடந்த தேர்தல்களில் நடைபெற்றுள்ளன.

எனவே, தமிழகஅரசு காலம் தாழ்த்தாமல் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி