பொது தேர்வுகள் நிறைவு 'ரிசல்ட்'தேதி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2019

பொது தேர்வுகள் நிறைவு 'ரிசல்ட்'தேதி அறிவிப்பு


தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், அனைத்து பொது தேர்வுகளும் நேற்றுடன் முடிந்தன. ஒரு மாதமாக நடந்த தேர்வின், விடை தாள் திருத்தம், நேற்று துவங்கியது.தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், ௧௦ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான பொது தேர்வுகள், 2018, ஜூனில் அறிவிக்கப்பட்டன. திட்டமிட்டபடி, மார்ச், 1ல் தேர்வுகள் துவங்கின.பிளஸ்2 தேர்வுகள், மார்ச், 1ல் துவங்கி, மார்ச், 19ல் முடிந்தன. பிளஸ் 1 தேர்வுகள், மார்ச், 6ல் துவங்கி, மார்ச், 22ல் முடிந்தன. பத்தாம் வகுப்பு தேர்வுகள், மார்ச், 14ல் துவங்கி, நேற்றுடன் முடிந்தன. ஒரு மாதம் நடத்தப்பட்ட பொது தேர்வுகள், எந்த குளறுபடியும் இன்றி, வினாத்தாள், 'லீக்' ஆகாமல், முடிந்துள்ளன.பிளஸ் 2 வினா தாள்கள் எளிதாக இருந்தன. ஆனால், பிளஸ் 1 தேர்வுகளில், கடின வினாக்களால் மாணவர்கள் திணறினர். பத்தாம் வகுப்பு தேர்வில், எப்போதும் இல்லாத அளவுக்கு, கணிதம், அறிவியல் தேர்வுகள் மிக கடினமாக இருந்தன. மற்ற பாடங்கள் எளிதாக இருந்தன.இந்த தேர்வுகளுக்கான விடை தாள் திருத்தம், படிப்படியாக துவங்க உள்ளது. முதலில், பிளஸ் 2 விடைத் தாள் திருத்தம், நேற்று துவங்கியது.

தேர்வு முடிவுகள், பிளஸ் 2வுக்கு, ஏப்.,19; பிளஸ் 1க்கு, மே, 8; பத்தாம் வகுப்புக்கு, ஏப்., 29ம்தேதிகளில் வெளியாகும் என, தேர்வு துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி