04.04.2019 - இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுவழக்கு விசாரணை விவரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2019

04.04.2019 - இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுவழக்கு விசாரணை விவரம்


2009  TET போராட்டக் குழுவில் இன்றைய 04.04.2019 வழக்கு விசாரணை விவரம்

இன்று நமது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்விசாரணைக்கு எட்டப்பட்டது விசாரணையின் பொழுது மற்றொரு தரப்பு மத்திய அரசுக்கு  இணையான ஊதியம் 9300 கோரி தொடர்ந்த வழக்கில் அரசின் பதில் மனுதாக்கல் செய்யப்படவில்லை, என்ற வாதத்தை  முன் வைத்தனர் அதனை மறுத்த நமது வழக்கறிஞர்கள் அந்த வழக்கை வேறு இந்த வழக்கு வேறு அதன் சாராம்சம் வேறு ஆகவே அதனை தனியாக விசாரிக்கும் படி கேட்டுக் கொண்டனர் நீதியரசர் அவர்களும் அதனை ஏற்று அந்த வழக்கை தனியாக பிரித்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துவிட்டனர்.

இனி அந்த வழக்கு நமது வழக்குடன் இணைந்து விசாரணைக்கு வராது.

மேலும் நமது வழக்கில் அனைத்து விதமான சட்ட வழிமுறைகளும்( PAPER WORK) முடிந்துவிட்டனஇறுதி கட்ட விசாரணை  மட்டும்தான்  உள்ளது. ஆகவே அதற்கான நாளை குறித்து தருமாறு நீதியரசரிடம் நமது தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். அதனைக் கேட்ட நீதியரசர் உடனடியாக இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் கட்டாயம்  என்ன வினா எழுப்பினர் ??

நமது தரப்பில் பழைய ஊதியம் தற்போது வரை அதிகமான எண்ணிக்கையில் பெற்றுக் கொண்டே இருந்திருந்தால் அதனை நாம் குறிப்பிட்டு இருப்போம் ஆனால் அவ்வாறு இல்லாத காரணத்தினால் அந்த வாதத்தை முன் வைக்காமல் 10 ஆண்டுகளாக  வாழ்வாதாரம் பாதிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது தற்போதய ஏழாவது ஊதியக் குழுவிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது எனவே இதை உடனடியாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது, அதனை ஏற்ற நீதியரசர் வரும் ஏப்ரல் 29-ம் தேதி இறுதி கட்ட விசாரணையை வைத்து கொள்ளலாம் என்று கூறி 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻 இறுதிக்கட்ட விசாரணை (FINAL ARGUMENT) தேதியை குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.**நமது வழக்கு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது மிக விரைவில் நம் கண்ணீருக்குநல்ல முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல் பகிர்வு
மாநில தலைமை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி