ஏப்.1, 2019-க்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்குகளுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயம் - வருமானவரித் துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2019

ஏப்.1, 2019-க்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்குகளுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயம் - வருமானவரித் துறை


ஏப்.1, 2019-க்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்குகளுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை மார்ச் 31-ம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால், ஆதார் எண் செல்லாததாகி விடும் என பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்நிலையில், மத்திய அரசு இதுகுறித்து ஆய்வு செய்து, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான இறுதி தேதியை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

இருப்பினும், 2019, ஏப்.1-ம் தேதிக்குப் (நேற்று முதல்) பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்குகளுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.வருமான வரி கணக்கை மின்னணு முறையிலோ அல்லது கையால் எழுதியோ தாக்கல் செய்யும்போது, ஆதார் எண்ணைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அதேசமயம், விதி விலக்கு அளிக்கப்பட்ட வருமான வரி கணக்குகளுக்கு ஆதார் எண்ணைக் குறிப்பிட அவசியமில்லை என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி