12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட ஆசிரியர்கள் எதிர்ப்பு.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2019

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட ஆசிரியர்கள் எதிர்ப்பு.!


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று முடிந்த 12ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகளை ஏப்ரல் 19ஆம் தேதியன்று வெளியிடக் கூடாது என ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நடந்துமுடிந்த 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் 19 தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர்ஏப்ரல் 19ஆம் தேதியன்று முடிவுகளை வெளியிடக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நாள் என்பதால் வாக்குச் சாவடி பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை பணிக்குத் திரும்புவதுகடினம்.

எனவே பள்ளி தேர்வு முடிவுகளை மாற்றுத்தேதியில் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 comment:

  1. அரசாங்கத்தின் சரியான திட்டமிடல் மிகவும் அவசியம்.ஆசிரியர்களின் நிலையை கவனத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும்.தேர்தல் பணி என்பது எங்களது சொந்த வேலை அல்ல.அரசு பணி தானே. தேர்தல் பணி செய்வதை அரசு தடுப்பது பொள் உள்ளது.ஒவ்வொரு வாக்குச்சாவடியில் பெட்டி எடுக்கவே 4மணி அதிகாலை வரை ஆகும்.அரசு இதனை உணர்ந்து செயல் படும் தருணம் இது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி