அணுசக்தி பள்ளியில் சேர்க்கை பெற்றோர் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2019

அணுசக்தி பள்ளியில் சேர்க்கை பெற்றோர் விண்ணப்பிக்கலாம்


அணுசக்தி மத்திய பள்ளிகளில், கல்வி உரிமை சட்டத்தில், மாணவர்கள் சேர்க்கைக்கு, இன்றும், நாளையும் விண்ணப்பம் வழங்குவதாக, நிர்வாகம் அறிவித்துள்ளது.

கல்பாக்கத்தில், அணுசக்தி முதலாம், இரண்டாம் மத்திய பள்ளிகள் இயங்குகின்றன. சுற்றுப்புற பகுதி குழந்தைகளை, இவற்றில் சேர்க்க, பெற்றோர் விரும்புகின்றனர்.கல்வி உரிமைச் சட்டத்தில், 2019 - 20ல், முதல் வகுப்பில், சுற்றுப்புற குழந்தைகளை அனுமதிக்க உள்ளனர்.

இதற்கான விண்ணப்பம், இன்றும், நாளையும், மதியம், 2:00 மணி - மாலை, 5:00 மணி வரை, அலுவலகத்தில் வழங்குவதாக, நிர்வாகம் அறிவித்துள்ளது.வயது வரம்பு, 2012 ஏப்., 1 - 2014 மார்ச், 31க்குள், குழந்தை பிறந்திருக்கவேண்டும். விண்ணப்பம் பெற, பிறப்பு, இருப்பிடச் சான்று நகல் அவசியம்.விண்ணப்பம் நிரப்பி, ஜாதி, வறுமைக்கோடு வருமான சான்றுகள், குழந்தை பெயருடன், குடும்ப, ஆதார் அட்டைகள் ஆகிய ஆவணங்களுடன், வரும், 9, 10ல், பிற்பகல், 2:00 மணி - மாலை 5:00 மணிக்குள் அளிக்கவேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி