கோடை விடுமுறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2019

கோடை விடுமுறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்


கோடை விடுமுறையை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டுமென்று மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறைஅறிவுரை வழங்கியுள்ளது.

கோடை விடுமுறை நாள்களில் மாணவர்கள் தினமும் நாளிதழ்களை படிக்க வேண்டும் என்றும், அரசு பொது நூலகத்திற்கு சென்று புத்தகங்களை படித்து குறிப்பு எடுக்க வேண்டும் என்றும் கல்வித்துறை தமது அறிவுரையில் தெரிவித்துள்ளது. வெப்பம் அதிகமாக இருப்பதால் பெற்றோர் துணையின்றி வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. நீர் நிலைகளுக்கு பெற்றோர் துணையின்றி செல்லக்கூடாதுஎன்றும், இருசக்கர வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், காலை மாலை வேளையில் விளையாட்டில் ஈடுபட வேண்டும். செல்லிடப்பேசியில் நீண்ட நேரம் பேசுவதை தவிர்த்து ஆக்கப்பூர்வமாக கோடை விடுமுறையைப் பயன்படுத்த வேண்டும், தனித்திறன் வளர்ப்பு பயிற்சியில் ஈடுபட வேண்டும் உட்பட பல அறிவுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன. ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி புதன்கிழமையுடன் தேர்வுகள் நிறைவடைந்தன. இருப்பினும், பள்ளி வேலை நாள்கள் வரும் சனிக்கிழமை (ஏப்.13) தேதி வரை நடைபெறும். இந்த நாள்களில் கோடை விடுமுறை தொடர்பான அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி