TNPSC - குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு : தேர்வு நடந்த ஒரு மாதத்தில் டிஎன்பிஎஸ்சி அதிரடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2019

TNPSC - குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு : தேர்வு நடந்த ஒரு மாதத்தில் டிஎன்பிஎஸ்சி அதிரடி


குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், மாவட்ட பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர் ஆகிய பதவிகளில் 181 காலிப்பணியிடங்களுக்கு மார்ச் 3-ம் தேதி தேர்வு நடந்தது; ஒரு மாதத்தில் தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.

1,68,549 விண்ணப்பத்தாரர்களில் முதன்மை தெரிவுக்கு 9,850 பேர் தேர்வாகியுள்ளார். ஜூலை 12,13 மற்றும் 14-ம் தேதிகளில் முதன்மை தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.  முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி