'மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு கூடுதலாக 100 இடங்கள் ஒதுக்கும் அறிவிப்பு 10 நாட்களில் வெளியாகும்,'' என சுகாதாரத்துறை செயலர்பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
இக்கல்லுாரியில் 150 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. கூடுதலாக 100 இடங்களை உருவாக்கி ஆண்டுதோறும் 250 மாணவர்கள் படிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக இந்திய மருத்துவ கவுன்சிலிடம் அனுமதி கோரியது.'இடங்களைஅதிகரிக்க போதிய கட்டட வசதிகள் இருக்கவேண்டும்' என கவுன்சில் தெரிவித்தது.தேவையான கட்டடங்களை கட்ட 66 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது. அதன் மூலம் வகுப்பறைகள், விரிவுரை கூடங்கள், நிர்வாக அலுவலகங்கள், மாணவருக்கான விடுதிகள் கட்டும் பணி நடக்கிறது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரிக்கும் கூடுதல் இடங்களை அரசு கோரியிருந்தது. இக்கோரிக்கையை ஏற்று சில நாட்களுக்கு முன் கூடுதலாக 100 இடங்களை ஒதுக்கி மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது. மதுரை கல்லுாரிக்கு கூடுதல் இடங்கள் குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை. இதனால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்து சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறுகையில், ''மதுரை மருத்துவக் கல்லுாரிக்கும் கூடுதலாக 100 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு 10 நாளில் வெளியாகும். இதுகுறித்த கூட்டம் டில்லியில் நடக்கவுள்ளது. நடப்பு ஆண்டில் கூடுதல் இடங்கள் கிடைக்கும்'' என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி