பிளஸ் 1 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல், நகலை பதிவிறக்கம் செய்யலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1 பொது தேர்வு எழுதியோர், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்திருந்தால், அவர்கள்,scan.tndge.in என்ற இணையதளத்தில், இன்று காலை, 10:00 மணி முதல், அதை பதிவிறக்கம் செய்யலாம். நகலை பார்த்து, மறுகூட்டலா, மறுமதிப்பீடா என முடிவு செய்து, விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை,அதே இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, அவற்றை பூர்த்தி செய்து, இரண்டு நகல்கள் எடுக்க வேண்டும். அதை, இன்று பகல், 2:00 முதல், 23ம் தேதிமாலை, 5:00 மணிக்குள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.இதற்கான கட்டணத்தை, முதன்மை கல்வி அலுவலகத்தில், ரொக்கமாகசெலுத்தலாம்.
மறுகூட்டலுக்கு, உயிரியலுக்கு, 305 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு, 205 ரூபாய்; மறுமதிப்பீடுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும் தலா, 505 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என, தேர்வுதுறை இயக்குனர், வசுந்தராதேவி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி