ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 ரீசார்ஜை இலவசமாக வழங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆம் வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் செய்தி ஒன்று கூறுவதாவது, ஐ.பி.எல். 2019 போட்டி தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ஜியோ சார்பில் ரூ.399 சலுகை இலவசமாக வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட 20,000 ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், இந்த செய்தி உண்மை இல்லை என தெரியவந்துள்ளது. ஜியோ சார்பில் இது போன்ற தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இது போன்ற செய்திகளை நம்பி வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை போலி தளத்திற்கு பறிக்கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜியோவின்சலுகைகள் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் மட்டுமே அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி