கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும். அன்றைய தினமே மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடை பெற்றன. இதர வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் ஏப்ரலில் முடிவடைந்தன. அதன் பின்னர் ஏப்ரல்13-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. 50 நாட்கள் விடுப்பு முடிந்து ஜூன் 3-ம் தேதி பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:கோடை விடுமுறை முடிந்து பள்ளி கள் ஜூன் 3-ம்தேதி திறக்கப்பட உள் ளன. இதையடுத்து பள்ளி மாணவர் களுக்கு அரசு வழங்கும் பாடப்புத்த கம், சீருடை உட்பட 14 வகை இல வசப் பொருட்கள்பாடநுால் கழக விநியோக மையங்களில் இருந்து தேவையான எண்ணிக்கையில் மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகள் மே 24-ம் தேதியுடன் முடி வடையும். தொடர்ந்து மாவட்டக் கல்வி அதிகாரிகள் 25 முதல் 30-ம் தேதிக்குள் இலவச பொருட்களை தனியார் வாகனங்கள் மூலம் எல்லா பள்ளிகளுக்கும் பிரித்து ஒப்படைக்க வேண்டும்.பள்ளிகளுக்குத் தரப்படும் பொருட் கள் தேவையான அளவு இருக்கிறதா என தலைமையாசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். குறைவாக இருந்தால் மாவட்டக் கல்வி அதிகாரியைத் தொடர்பு கொண்டு பள்ளி தொடங் கும் முன்பே அதை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதேபோல், தேவைப் பட்டியலின்படி இலவசப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதை மாவட்டக் கல்வி அதிகாரிகளும் உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் முதன்மை கல்விஅதிகாரி மூலம் கூடுதல் பட்டியலை இயக்குநரிடம் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.பள்ளிகள் திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு அனைத்து வகை இலவசப் பொருட்களும் வழங்கப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளுக் கும் மே 31-ம் தேதிக்குள் இலவச பொருட்கள் வழங்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
🙄
ReplyDelete