திட்டமிட்டபடி ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2019

திட்டமிட்டபடி ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை


கடும் வெயில் வாட்டி வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிப்போகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி ஜூன் 3-ம் தேதி அன்றே பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கடும் கோடை வெயில் காரணமாக பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உள்ளது. கோடையில் தண்ணீர்  பஞ்சமும் நிலவுகிறது.

இதனால் இந்த ஆண்டு பள்ளிகளை அறிவித்தபடி ஜூன் 3-ம் தேதி அன்று திறக்காமல் சற்று தாமதமாக திறக்கும்படி பெற்றோர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது.கடும் வெயில் காரணமாக 2017-ம் ஆண்டு, ஜூன் 1-ம் தேதிக்குப் பதிலாக ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டுகடும் கோடையில்  ஜூன் 1-ம் தேதிக்குப் பதிலாக ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.இந்த ஆண்டும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியைத்தாண்டி வாட்டி வருகிறது. கடும் கோடை, தண்ணீர்  பஞ்சம் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி  ஜூன் 10-க்கு தள்ளி வைக்கப்படலாம் என்கிற தகவல் பரவியது.இதுகுறித்து கருத்து கூறாமல் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மவுனம் காத்துவந்த நிலையில் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 அதன்படி பள்ளிகள் திட்டமிட்டபடி வழக்கமாக ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.2019-20 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் முழுமையாக முடிக்க வேண்டிய நிலையிலுள்ளதால் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 3 அன்று திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி