8,462 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியத்தை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 18, 2019

8,462 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியத்தை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


தமிழக பள்ளிக்கல்வித்துறையில், கடந்த 2011-12ம் ஆண்டு அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதலாக 1,590 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதேபோல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின்கீழ் 6,872 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 8,462 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். இவர்களின் பணி நீட்டிப்பு காலம் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன், முடிவுற்றது. இதனையடுத்து, பணி நீட்டிப்பு வழங்குவது குறித்த கருத்துரு பள்ளிக்கல்வி இயக்குநரால் அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது. இதனிடையே, துறைத்தலைவரின் அதிகாரத்தின் அடிப்படையில், கடந்த ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய 3 மாதங்களுக்கு ஊதியம் கொடுப்பானை வழங்கப்பட்டு, சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர், சம்பள நீட்டிப்பு தொடர்பான ஆணை எதுவும் வெளியிடப்படவில்லை.

இதனால், ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் கிடைக்காமல் 8,462 ஆசிரியர்களும் பரிதவித்து வந்தனர். எனவே, உடனடியாக ஊதியம் கிடைக்கச் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கடந்த 8ம் தேதி, கல்விச்செய்தியில் வெளியானது. இதன்பேரில் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், ஏப்ரல் மாதத்திற்கான சம்பள நீட்டிப்பு ஆணையை வெளியிட்டுள்ளனர். அதன்படி, 8,462 ஆசிரியர்களுக்கும், கடந்த மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவுள்ளது. இதனால், ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி