'பள்ளி வாகனங்களில், பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:பள்ளி வாகனங்களில் கவனமின்மை காரணமாக, விபத்து ஏற்பட்டு, அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன.
எனவே, பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு நடைமுறைகளை, கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனைத்து பள்ளி வாகனங்களுக்கும், முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும்; தரச்சான்று புதுப்பிக்கப்பட வேண்டும்.அனைத்து பள்ளி வாகனங்களும், காப்பீடு செய்யப்பட வேண்டும். வாகனத்தின் முன்னும், பின்னும், 'பள்ளிவாகனம்' என, பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். முதல் உதவி பெட்டி கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.தீயணைப்பு கருவி, பாதுகாப்புகம்பி பொருத்தியிருக்க வேண்டும். புத்தகப்பை வைக்க இடவசதி வேண்டும். அவசரகால வழி இருக்க வேண்டும். வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தியிருக்கவேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி