மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில் நடக்கும் பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை கண்டறியும் பணியில் குழந்தைகளை கண்டறிவது பெரும் சவாலாக உள்ளது என ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
மாவட்டத்தில் இந்தாண்டு 800 பேர் கண்டறிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 15 கல்வி ஒன்றியங்களிலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்சாந்தி தலைமையில் வட்டார வள மைய அலுவலர்கள் (பி.ஆர்.டி.,க்கள்) மற்றும் சிறப்பாசிரியர் என 142 பேர் ஈடுபட்டுள்ளனர்.மதுரையில் பல பகுதிகளில் குழந்தை தொழிலாளர் உள்ளனர். அவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் விரும்பவில்லை. இதனால் 'சம்பந்தப்பட்ட குழந்தை வெளியூரில் இருந்து விடுமுறைக்கு வந்துள்ளது, உறவினர் வீட்டு பிள்ளை, ஏற்கனவே பள்ளியில் படிக்கிறது...' என தவறான தகவல்கள் தருகின்றனர்.இதனால் உண்மையான இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிவதில் சவாலாக உள்ளது. இருப்பினும் தொடர்ந்து குழந்தை கண்டறிதல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்தாண்டு மதுரையில் 1371 குழந்தை கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். இந்தாண்டு இதுவரை 5 - 14 வயதுக்குட்பட்ட 125 பேர், 15- 18 க்கு உட்பட்ட 93, சிறப்பு குழந்தை 54 பேர் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். மே 25 வரை இம்முகாம் நடக்கவுள்ளது. இந்தாண்டும் 800க்கும் மேல் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும். கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு பள்ளி, இணைப்பு மையம், ஆதரவற்ற குழந்தைகள் உண்டு உறைவிடப் பள்ளிகள் மற்றும் பகல் நேர பாதுகாப்பு மையங்களில் சேர்க்கப்படுவர் என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி