பொறியியல் கலந்தாய்வு நாளை (25.06.2019) தொடங்குகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2019

பொறியியல் கலந்தாய்வு நாளை (25.06.2019) தொடங்குகிறது


பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப் பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் கலந்தாய்வுக்கு தகுதிபெற்றுள்ளனர்.

முதல்கட்ட மாக சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வும் அதைத்தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான ஆன் லைன் கலந்தாய்வும் நடத்தப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. அந்த வகையில், சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந் தாய்வு நாளை (25-ம் தேதி) தொடங்கி 27-ம் தேதி வரை 3 நாட்கள் சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

முதல் நாளன்று மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள் கிறார்கள். 26-ம் தேதி முன்னாள்ராணுவத்தினரின் வாரிசு களுக்கும் கடைசி நாளான 27-ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு நாள், நேரம், மையம் குறித்து சம்பந்தப் பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எஸ்எம்எஸ், மின்னஞ்சல் வாயி லாக தகவல் தெரிவிக்கப்பட்டி ருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் டி.புருஷோத்தமன் தெரிவித்தார். தொழிற்கல்வி பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு ஜூன் 26 முதல் 28-ம் தேதி வரை சென்னையில் நடைபெறும். பொதுப்பிரிவுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி தொடங்குகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி