அரசு ஊழியர்கள் போராட்டத்தின் போது, மாவட்ட கருவூல அலுவலகங்களில், தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2019

அரசு ஊழியர்கள் போராட்டத்தின் போது, மாவட்ட கருவூல அலுவலகங்களில், தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவு.


'அரசு ஊழியர்கள் போராட்டத்தின் போது, மாவட்ட கருவூல அலுவலகங்களில், தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.

மின்னணு முறையில், அரசு ஊழியர்களின் மாத சம்பளபட்டியலை தயாரிக்க, 'விப்ரோ' நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதை ரத்து செய்து, அப்பணியை அரசே ஏற்று நடத்தக் கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஜூன், 25, ஜூலை, 2ல், சென்னையில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையம் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து, கருவூலஅதிகாரிகளுக்கு, துறையின் கூடுதல் இயக்குனர் அனுப்பியுள்ள கடிதம்:

அரசு ஊழியர்களின் தொடர் போராட்டங்களால், பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மாவட்ட கருவூல அலுவலகங்கள், சார் கருவூலங்களில், தகுந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.கலெக்டர்கள், எஸ்.பி.,க் களை தொடர்பு கொண்டு, போராட்ட தருணங்களில், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி