சீனியருக்கு ஏமாற்றம்; ஜூனியருக்கு யோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2019

சீனியருக்கு ஏமாற்றம்; ஜூனியருக்கு யோகம்


தமிழகத்தில் பிளஸ் 2 முடித்து இரண்டு ஆண்டுகள் காத்திருந்த மாணவர்களுக்கு, கல்வித்துறை உத்தரவால் இலவச லேப்டாப்கள் கிடைக்கவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் இருந்த இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் பிளஸ் 1க்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பின் அடுத்த கல்வியாண்டில் தான் மாணவருக்கு லேப்டாப் வினியோகிப்படும். அந்த வகையில் 2017 - 18ம் ஆண்டில் பிளஸ் 2முடித்தவர்கள் தற்போது கல்லுாரிகளில்2ம் ஆண்டு படிக்கின்றனர்.இவர்களுக்குநடப்பு கல்வியாண்டில் ஒதுக்கப்பட்ட லேப்டாப்களை, தற்போது பிளஸ் 1 படிக்கும் மாணவருக்கு வழங்க சிறப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துஉள்ளனர்.அவர்கள் கூறுகையில், "இரண்டு ஆண்டு காத்திருந்தும் கிடைக்கவில்லை. எங்களுக்கு முன் மற்றும் பின் படித்த அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் கிடைத்துள்ளது.

எங்களுக்கு ஏன் மறுக்கப்பட்டுள்ளது" என்றனர்.கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:நடப்பு கல்வியாண்டில், 2017 - 2018, 2018- 2019 மற்றும் 2019 - 2020 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து 15,53,359 லேப்டாப் ஒதுக்கப்பட்டன.

பிளஸ் 1க்கும் லேப்டாப் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளதாலும் தற்போது நீட், ஜே.இ.இ., சிலாட் உள்ளிட்ட பல தேர்வுகளுக்காக அவர்கள் தயாராகி வருவதாலும் 2017 - 2018ம் ஆண்டுக்குஒதுக்கப்பட்ட லேப்டாப்களை அவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது, என்றார்.இதை அறிந்த பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். லேப்டாப் வழங்குவது மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி