மூன்றாண்டு சட்ட படிப்பு இன்றுமுதல் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2019

மூன்றாண்டு சட்ட படிப்பு இன்றுமுதல் விண்ணப்பம்


அரசு சட்ட கல்லுாரிகளில் மூன்றாண்டு பட்ட படிப்புக்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் வினியோகம் செய்யப்படுகின்றன.

தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை இணைப்பில் உள்ள 12 சட்ட கல்லுாரிகளில் மூன்றாண்டு சட்ட படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.

சட்ட பல்கலையிலும் ஒவ்வொரு சட்ட கல்லுாரிகளிலும் விண்ணப்பங்களை பெறலாம்.மேலும் சென்னையில் சட்ட பல்கலை வளாகத்தில் செயல்படும் சீர்மிகு சட்ட கல்லுாரியில் மூன்று ஆண்டு 'ஹானர்ஸ்' சட்ட படிப்புக்கும் இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

இதற்கு சீர்மிகு சட்ட கல்லுாரியில் மட்டுமே விண்ணப்பங்கள் கிடைக்கும். ஜூலை 27க்குள் விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களை http://www.tndalu.ac.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி