10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள்உண்ணாவிரதம்: பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2019

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள்உண்ணாவிரதம்: பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை


10 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி சென்னையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் நேற்றுஉண் ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட் டனர். அரசு ஊழியர்களின் கோரிக் கைகள் தொடர்பாக தமிழக முதல் வர் தங்களை பேச்சுவார்த்தைக்குஅழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்வது, ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான நடவடிக் கையை திரும்பப் பெறுவது மு.சுப்ரமணியன் உள்ளிட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் மீதான சஸ்பெண்ட் நடவடிக் கையை வாபஸ் பெறுவது உள் ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் நேற்று ஒருநாள் அடையாள உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், ஜாக்டோ ஜியோ அமைப் பின் மாநில ஒருங்கிணைப்பா ளர்கள், உயர்நிலைக்குழு உறுப் பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி கோஷமிட்டனர்.

போராட்டத்துக்கு இடையில், மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மாயவன் செய்தியாளர் களிடம் கூறுகையில், ‘‘7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைளுக்காக போராடிய அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக் கைகளை அரசு உடனடியாக திரும் பப் பெற வேண்டும். கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.பேச்சுவார்த்தைக்கு மறுத்தால் எவ்வாறு நாடாளுமன்றத் தேர் தலில் 38 இடங்களை அதிமுக இழந்ததோ அதைபோல் வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் அனைத்து இடங்களையும் இழக்க நேரிடும். எங்களின் கோரிக்கை களை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம்’’ என்றார்.மற்றொரு மாநில ஒருங்கிணைப் பாளரான மீனாட்சிசுந்தரம் கூறு கையில், ‘‘அரசு ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக கைவிட வேண் டும். கோரிக்கைளை நிறைவேற்று வது தொடர்பாக முதல்வர் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்துப் பேச வேண்டும்.

அரசு துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு வகை செய்யும் அரசாணையையும் (எண் 56), அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்புக்கு வழிவகுக்கும் அரசாணைகளையும் (எண் 100, 101) உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’’ என்றார். காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைந் தது.

3 comments:

  1. என்ன செய்வது, 111 விதி தான் !!!???
    அனைத்து ஆசிாியா்களுக்குமே போதாத காலம்!!
    இது

    ReplyDelete
  2. பழி வாங்குதல்
    குறையப்போவதில்லை
    பதிலாக அதிகாித்துக்கொண்டேபோகிறது,
    காரணம்....

    ReplyDelete
  3. படித்தவனுக்குத்தான் படித்தவனுடைய அருமை தெரியும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி