ஆண்டுக்கு, 6,000 ரூபாய் கல்வி உதவித்தொகை - தபால் துறை திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2019

ஆண்டுக்கு, 6,000 ரூபாய் கல்வி உதவித்தொகை - தபால் துறை திட்டம்


தபால் தலை சேகரிக்கும், மாணவ - மாணவியருக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.அரிய தபால் தலை சேகரிப்பை, மாணவ - மாணவியரிடம் ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு, 'தீன்தயாள்ஸ்பார்ஷ் யோஜனா' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதன் கீழ், ஆண்டுக்கு, 6,000 ரூபாய், கல்வி உதவித் தொகை பெற, ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும், மாணவ - மாணவியர் விண்ணப்பிக்கலாம்.பள்ளி ஆண்டு இறுதித் தேர்வில், 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., மாணவருக்கு, 5 சதவீதம் மதிப்பெண் சலுகை உண்டு. விண்ணப்பிக்க, வரும், 26ம் தேதி கடைசி நாள்.விண்ணப்பிப்போருக்கு, ஆக., 26ல், பொது அறிவு தொடர்பான எழுத்துத் தேர்வு நடைபெறும்.

தபால் தலை சேகரிப்புக்கு, 25, பொது அறிவுத் தேர்வுக்கு, 25 மதிப்பெண் என, 50 மதிப்பெண் வழங்கப்படும்.தமிழ்நாடு சர்க்கிளில், 40 மாணவ -மாணவியருக்கு, ஒவ்வொரு வகுப்புக்கும், 10 பேர் வீதம், உதவித் தொகை வழங்கப்படும். தேர்வாகும் மாணவ - மாணவியர், தபால் தலை சேகரிப்பு செயல் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி