கிராமத்து பள்ளிகளை மூடிவிட்டால் அங்கிருக்கும் மாணவர்கள் எங்கே போவார்கள்? நடிகர் சூர்யா ஆவேச பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2019

கிராமத்து பள்ளிகளை மூடிவிட்டால் அங்கிருக்கும் மாணவர்கள் எங்கே போவார்கள்? நடிகர் சூர்யா ஆவேச பேச்சு


2006ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவால் துவங்கப்பட்டது அகரம் கல்வி அறக்கட்டளை தொண்டு நிறுவனம். இதன் மூலம் இதுவரை 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேற்படிப்புகளை முடித்து வேலை செய்து வருகின்றனர். மேலும் தற்போது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இன்று அகரம் அறக்கட்டளையின் சார்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார் நடிகர் சூர்யா. தமிழகத்தில் தற்போது நிலவிவரும் கல்வி முறைகளைப் பற்றியும் அரசு பள்ளிகளில் நிலைகளைப் பற்றியும் புட்டுப்புட்டு வைத்துள்ளார்.ஒட்டு மொத்த இந்தியாவில் கல்வி தரத்தைமாற்றுவதன் மூலம் 30 கோடி மாணவர்களின் வாழ்க்கையை மாற்றலாம். ஆனால் இதைக் குறித்து யாரும் பேசுவதில்லை. முக்கியமாக மாணவர்களும் ஆசிரியர்களும் இதைப்பற்றி ஏன் பேசவில்லை என சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளி என்ற முறையில் பழங்குடி கிராமங்களில் உள்ள 1848 பள்ளிகள் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு அந்தப் பள்ளிகளை மூடி விட்டால் அந்த பகுதியில் இருக்கும் மாணவர்கள் படிப்பதற்கு எங்கே போவார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அனைத்து மாணவர்களுக்கும் ஒரே விதமான கல்வி முறையை பின்பற்றாமல் அவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்ப்பது முறையா? அதைப் போன்ற தகுதித் தேர்வுகள் குறிப்பாக நீட் போன்ற தேர்வுகள் நடத்துவது முறையா? சில பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாத நிலையில் அந்தப் பள்ளிகளில் இருக்கும் மாணவர்கள் எவ்வாறு நீட் தேர்வு எழுதுவார்கள்? இந்த நிலை மாற வேண்டும்; இது குறித்து அனைவரும் பேச வேண்டும் எனவும் நடிகர் சூர்யா கோரிக்கை வைத்துள்ளார்.

6 comments:

  1. Like pandra Mari oru option vainga kalviseithi

    ReplyDelete
  2. ப்ளீஸ் suriya
    sir நீங்களாவது எங்க நிலைமை
    யை (govtஸ்கூல் மாணவர்கள் )இந்தே govt எடுத்து சொல்லுங்க

    ReplyDelete
  3. Neet coaching center nalla sampathikiran matric school la neet ku oru admission fee board ku oru fees ethellam padikka manavanukku vasathi vendum panakkaara muthaligal vala than ethellam oru varudam exam padithu entrance exam eluthi pass anavargal miga kuraivu 2 3 attempt eluthiya vargal athigama select agirargal so fresh candidate cut of vittal entha coaching thevai ella every year talented student can get seat so anaithu coaching center valara vidamal thaduthal thiramaiyana vargalukku vaipu kittum ellai entral meendum kalvi best business aga marum

    ReplyDelete
  4. surya sir, your speech delivered right time.

    ReplyDelete
  5. Suriya sir pls listen my words

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி