வரும் 2021-ம் ஆண்டு நடை பெற உள்ள நீட் மற்றும் ஜேஇஇ போட்டித் தேர்வுகளுக்கு நடப்பு கல்வியாண்டில் (2019-20) பிளஸ்-2 படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களை திறம்பட தயார் செய்வதற்காக ஓராண்டு பயிற் சியை புனேயில் உள்ள தக்ஷனா என்ற நிறுவனம் வழங்க உள்ளது.
இந்தபயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் ஆங்கில வழியில் அறிவியல் பாடப் பிரிவில் படிப்பவராக இருக்க வேண்டும். 10-ம்வகுப்பு தேர் வில் 70 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண் டும். புனேவில் உள்ள தக்ஷனா நிறுவனத்தில் ஓராண்டு தங்கி பயில விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். உணவு, விடுதி வசதி, பயிற்சி கட்டணம் இலவசம்.
மாணவர் களின் பெற்றோரிடம் இருந்து விருப்பக் கடிதத்தை பள்ளி தலைமை ஆசிரியர் பெற வேண் டும். தலைமை ஆசிரியர்கள் மூலம் ஒரு பள்ளிக்கு 10 மாணவர் கள் வீதம் தேர்வு செய்து அதன் பட்டியலை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த பயிற்சிக்கு டிசம்பர் 8-ல் தக்ஷனா நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வு மூலம் மாணவர்கள் இறுதி யாக தேர்வு செய்யப்படுவர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி