கோடை விடுமுறையில் பயிற்சி - ஆசிரியர்களுக்கு2 நாள்கள் ஈடுசெய் விடுப்பு வழங்க கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2012

கோடை விடுமுறையில் பயிற்சி - ஆசிரியர்களுக்கு2 நாள்கள் ஈடுசெய் விடுப்பு வழங்க கோரிக்கை

மே 29 முதல் 31 வரை நடைபெறுக்கின்ற முப்பருவ கல்வி முறை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தொடர்பான பயிற்சியில் பங்கேற்று பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு 2 நாள்கள் ஈடுசெய் விடுப்பு வழங்க வேண்டுமெனத் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் க. இசக்கியப்பன், பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:தமிழக அரசு 2012-13-ம் கல்வியாண்டில் 1-8 வகுப்புகளுக்கு முப்பருவ தேர்வுமுறையை அமல்படுத்தியுள்ளது. அதற்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை பயிற்சி தொடக்கக்கல்வித் துறையில் 2011-12-ம் கல்வியாண்டு இறுதியில் (ஏப்ரல் மாதத்தில்) நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் 6,7,8 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் கோடை விடுமுறையான மே 28-31 நாட்களில் நடத்தப்பட்டு வருகிறது.கடந்த ஏப்ரல் 10ம் தேதி எங்களது அமைப்பின் சார்பில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களைச் சந்தித்து பயிற்சிகளை 2012 ஜூன் முதல் வாரத்தில் நடத்திட கோரிக்கை விடப்பட்டது. தற்போது விடுமுறை நாளில் பயிற்சி நடத்தப்பட்டதால் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு 2 நாள்களுக்கு 2012-13ம் கல்வியாண்டில் அந்நாட்களை ஈடு செய்திடும் விதமாக ஈடுகட்டும் விடுப்பு வழங்கிட வேண்டுமென எங்களது அமைப்பின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி