பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள், 3 நாட்களுக்கு வினியோகம் இல்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2012

பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள், 3 நாட்களுக்கு வினியோகம் இல்லை

அண்ணா பல்கலையின் பொறியியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்அச்சடிக்கும் பணி நடப்பதால், வரும் 23ம் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படாது என்றும், 24ம் தேதி முதல் வினியோகம் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாணவர் சேர்க்கைக்காக, கல்லூரிகள் பற்றிய தகவல்கள் கொண்ட புத்தகம், தகவல் கையேடு, கோடிங் ஷீட்டுகள், விண்ணப்பங்கள் ஆகியவை 2 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டன. இம்மாதம் 19ம் தேதி வரை, 2 லட்சம் விண்ணப்பங்களும் விற்றுவிட்டன.மேலும், 40 ஆயிரம் விண்ணப்பங்களை அச்சிட்டு, அவற்றை 59 மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. எனவே, பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 21, 22 மற்றும் 23ம் தேதிகளில் வழங்கப்படமாட்டாது.அனைத்து மையங்களிலும், இம்மாதம் 24ம் தேதி முதல் 31ம்தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி