திருவண்ணாமலையில் டி.ஆர்.பி. தேர்வு மையங்கள்மாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2012

திருவண்ணாமலையில் டி.ஆர்.பி. தேர்வு மையங்கள்மாற்றம்.

திருவண்ணாமலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும்முதுகலை ஆசிரியர் பணியிடத்துக்கான தேர்வு மையங்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நூர்ஜகான் வெளியிட்டுள்ள செய்தி: ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை ஆசிரியர் பணியிடத்துக்கான நேரடிப் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது.இதற்கான நுழைவுச் சீட்டுகள் தேர்வர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலையில் சில மையங்களில் தேர்வு நடத்த இடர்பாடு உள்ளது. எனவே, ஏற்கெனவே தேர்வர்களின் நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் என்று குறிப்பிட்ட நுழைவச் சீட்டு பெற்றவர்கள், திருவண்ணாமலையை அடுத்த கீழ்நாச்சிப்பட்டில் உள்ள காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல, திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப்பள்ளி என்று குறிப்பிடப்பட்ட நுழைவுச்சீட்டு பெற்றவர்கள், திருவண்ணாமலை-திருக்கோயிலூர் ரோட்டில் உள்ள சாரோன், ஏ.எல்.சி.மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி