பள்ளிகள் திறந்து 15 நாள்கள் ஆகியும் தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால் முப்பருவப் புத்தகமா, செயல்வழிக் கற்றல் அட்டையா, எந்த வழியில் பாடம் நடத்துவது என்று குழப்பத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர்.கடந்த 2005-06ம் கல்வி ஆண்டில் ஏ.பி.எல். எனப்படும் செயல்வழிக் கற்றல் முறை சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 4-ஆம் வகுப்பு வரை இம்முறை நடைமுறைப் படுத்தப்பட்டது.இம்முறையில் மாணவர்களுக்கு புத்தகங்கள் இருந்தாலும் கற்றல் அட்டை வாயிலான படிப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இம்முறையில் 1 முதல் 4-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு கற்றல் அட்டைகளைப் படிப்பதன் மூலம் படிநிலை அடிப்படையில் மதிப்பிடப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு மாணவர்களின் புத்தகச் சுமையை குறைக்கும் விதமாக அரசு முப்பருவ முறையில் புத்தகங்களை அறிமுகம் செய்துள்ளது. அதனால் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் முப்பருவ முறை பாடப் புத்தகங்களின் அடிப்படையில் பாடம் நடத்தத் தொடங்கி விட்டனர்.ஆனால் அரசுப் பள்ளிகளில் ஏ.பி.எல். முறைப்படி மாணவர்களைப் பிரித்து கற்றல் அட்டைகளை வைத்து பாடம் நடத்துவதா, வகுப்பு வாரியாகப் பிரித்து முப்பருவ முறை புத்தகங்களை வைத்து பாடம் நடத்துவதா எனக் குழப்பத்தில் உள்ளதாகக் கூறுகின்றனர் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்.இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்களில் விசாரித்த போது, இன்னும் 15 நாட்களில் கற்றல் அட்டைகள் பள்ளிகளுக்கு அனுப்பப்படும். கற்பித்தலைப் பொறுத்தவரை செயல்வழிக் கற்றல் முறையே தொடரும் என்றனர்.
Jun 18, 2012
Home
kalviseithi
தமிழகத்தில் முப்பருவ புத்தகமா அல்லது செயல்வழிக் கற்றல் அட்டையா?
தமிழகத்தில் முப்பருவ புத்தகமா அல்லது செயல்வழிக் கற்றல் அட்டையா?
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி