நீலம் புயல் : கனமழை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று மதியம் விடுமுறையும், சென்னை விமானம் நிலையம், துறைமுகம் இன்று பிற்பகல் மூடப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2012

நீலம் புயல் : கனமழை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று மதியம் விடுமுறையும், சென்னை விமானம் நிலையம், துறைமுகம் இன்று பிற்பகல் மூடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உடனடியாக வீடு திரும்ப தமிழக அரசு அறிவுறுத்தல்.கடற்கரை, வேளச்சேரி பறக்கும் இரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.சென்னை பொதுமக்கள் புயல் மற்றும் கனமழை சார்பான அவசர உதவிக்கு1913என்ற இலவச எண்ணிற்கு அழைக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.நீலம் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சென்னை விமான நிலையம் இன்று பிற்பகல் மூடப்படுகிறது.சென்னைக்கு வரவுள்ள விமானங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டு, மதுரை மற்றும் ஐதராபாத்திற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக  தகவல்கள் தெர்விக்கின்றன. கடற்கரை, வேளச்சேரி பறக்கும் இரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி