PG - TRB வழக்கு நிலுவை பற்றிய விவரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2012

PG - TRB வழக்கு நிலுவை பற்றிய விவரம்

பல வழக்குகளை சந்தித்து இறுதியாக PG TRB க்கு இருமடங்கான தகுதியானவர்கள் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது.எப்படியோ...
பிரட்சனைகள் எல்லாம் முடிந்து வேலை கிடைத்துவிடும் என்று காத்திருந்த ஆசிரியர்களுக்கு கிடைத்ததோ இந்த முறையும் ஏமாற்றம் தான். யாரோ ஒருவர் Applied Mathematics படித்து TRB ல் தேர்ச்சி பெற்று தற்போது வேலைகிடையாது என்று கேள்விபட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறாராம்.
அதுமட்டும் அல்லாமல் எதற்காக 2:1 என்ற விகிதத்தில்
ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது என்றும் கேள்விகள்
எழுந்துள்ளதாம்.இதுதான் இப்படி என்றால் TET க்கு ஏதோ ஒரு வழக்கை நீதி மன்றத்தில் தொடுத்துள்ளார்களாம் 4500 பேர் சார்பாக. ஆனால்
TRB ஐ தொடர்பு கொண்டு வினவியதில் இந்த மாதம் இறுதிக்குள் Selection list வெளியிடப்பட்டு அடுத்த
மாத தொடக்கத்தில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த
வழக்கு தொடுப்பவர்களுக்கு ஒரு கேள்வி...
ஒரு வேலையும் இன்னும் ஒழுங்காக போடப்படவில்லை இந்த 6 மாதத்தில் இப்போது போடப்பட்ட Steno Graph & typist பணியிடங்களில் கூட ( Final tally steno called 1154 : allotted-507 Not
qualified :418 absent:209 allotment letters sent to
depts.selcted candidates will get appointment within seven days .they shd report to concerned dept.they have chosen) இந்த வழக்கு தொடுப்பவர்களுக்கு ஒரு கேள்வி... ஏன் உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா?
ஆனா ஊனா ஏதாவது வழக்கை போட்டு ஆயிரக்கணக்கானோரின் வசைமாரிகளை ஏன் பெற
வேண்டும்?இந்த ஆண்டு முறை இல்லாவிட்டால் ...
திறமை இருந்தால் அடுத்த முறை பார்த்துக்கொள்ள
வேண்டியதுதான்..அது என்ன இப்படி ஒரு சந்தோசம்
இப்படிபட்டவர்களுக்கு? சகிப்புத்தன்மை பொறுமை இவற்றை இவர்கள் பள்ளியில் சொல்லிகொடுக்கவே போல தெரிகிறது. சரி விடுங்க... ஏதோ நடப்பதுதான்
நடக்கும் நாமாவது பொறுமையாக இருப்போம்.
நன்றி : திரு. ஜகன்நாதன

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி