ஐ.ஏ.எஸ். நேர்முகத் தேர்வு ஏப்ரல் 9-ல் தொடங்குகிறது : முதல்கட்டமாக 1,281 பேர் பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2014

ஐ.ஏ.எஸ். நேர்முகத் தேர்வு ஏப்ரல் 9-ல் தொடங்குகிறது : முதல்கட்டமாக 1,281 பேர் பட்டியல் வெளியீடு.


ஐ.ஏ.எஸ். நேர்முகத் தேர்வு ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது. முதல்கட்டமாக 1,281 பேர் அடங்கிய பட்டியலை யூ.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 9 முதல் நேர்காணல்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 12 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.சுமார் 1,000 காலியிடங் களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வின் முடிவு கடந்த11-ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் 3003 பேர் தேர்ச்சி அடைந் தனர். தமிழகத்தில் இருந்து ஏறத் தாழ 300 பேர் வெற்றிபெற்றனர். நேர்முகத் தேர்வு ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது.

முதல்கட்ட பட்டியல் வெளியீடு

இந்த நிலையில், நேர்முகத் தேர்வுக்கான முதல்கட்ட பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் 1,281 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள்.பதிவு எண், நேர்முகத் தேர்வு தேதி, நேரம், பெயர் ஆகிய விவரங்களை இந்த பட்டியலில் தெரிந்துகொள்ளலாம். இதர விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத் தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று யூ.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி