அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு பல்கலையாக மாற்றப்பட்டுள்ளதால் தொழிற்கல்வி நிலையங்களுக்கான சேர்க்கைச் சட்டம் விதிமுறைகள்படி, மாணவர்கள் சேர்க்கை, கலந்தாய்வு முறையில் நடைபெறும்' என, பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அண்ணாமலை பல்கலைக் கழக நிர்வாக சிறப்பு அதிகாரி, ஷிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், பல்வேறு தொழிற்கல்வி படிப்புகளுக்கு, அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு என தனியாக,கடந்த ஆண்டு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில், 'கவுன்சிலிங்' முறைகள், மாணவர்கள் சேர்க்கை நடந்தது. கடந்த, 2013ல், அண்ணாமலை பல்கலைக் கழகம், அரசு பல்கலைக் கழகமாக அமலுக்கு வந்தது. இதனால், பல்கலைக் கழக தொழிற் கல்வி படிப்புகளுக்கு, தமிழ்நாடு தொழிற்கல்வி நிலையங்களுக்கான சேர்க்கை சட்டம் 2006ன் படி, மாணவர்கள் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த, அரசு ஆணை பிறப்பித்து, உத்தரவிட்டுள்ளது. வரும், 201415ம் ஆண்டுக்கான தொழிற் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு, அரசு இடஒதுக்கீடு விதிகள்படி நடைபெறும். இதற்கான விண்ணப்ப வினியோகம், கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி