பள்ளி திறப்பு நாளில் நோட்டு, புத்தகம் வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை: இணை இயக்குனர் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2014

பள்ளி திறப்பு நாளில் நோட்டு, புத்தகம் வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை: இணை இயக்குனர் எச்சரிக்கை


பள்ளி திறக்கும் நாளில், விலையில்லா நோட்டு, புத்தகங்களை வழங்காத பள்ளிகள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ஸ்ரீதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ஸ்ரீதேவி பேசியதாவது: பள்ளிதிறக்கும் போது, அனைத்து மாணவர்களுக்கும், தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா பொருட்களான புத்தகம், நோட்டு ஆகியவை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. படிப்படியாக மற்ற விலையில்லா பொருட்களான சீருடை, எழுது பொருட்கள் வழங்கப்படும். தமிழக அரசின் விலையில்லா நோட்டு, புத்தகங்களை, பள்ளி திறக்கும் நாளில் வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா பள்ளிகளிலும், மழை நீர் சேகரிப்பு தொட்டி அவசியம் இருக்க வேண்டும்.

ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள இலவச பஸ் பாஸை, மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். புதிதாக இலவச பஸ் பாஸ் பெற தகுதியுள்ள மாணவர்களுக்கு, தாமதம் இன்றி பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். முதன்மை கல்வி அலுவலர் தமிழரசு, அனை வருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து,மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் ரெங்கராஜன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கண்ணையன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி