இன்று மாணவர் சேர்க்கை: பெற்றோர் சென்றாலே போதும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2020

இன்று மாணவர் சேர்க்கை: பெற்றோர் சென்றாலே போதும்

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, இன்று முதல் துவங்குகிறது. அங்கன்வாடிகளில் இருந்து ஐந்து வயதுக்கு மேற்பட்டோர் குறித்த, விபரங்கள் திரட்டி, அக்குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதேபோல், அருகில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை இறுதி வகுப்புகளில் இருந்து வெளியேறும் மாணவர்களை, அரசுப்பள்ளிகளிலே சேர்க்க, ஆவன செய்யுமாறு தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, பெற்றோர் மட்டும் வந்து, குழந்தையின் பெயர், வகுப்பு உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்தால் போதுமானது. 


பாடப்புத்தகங்கள், நோட்டு, புத்தகப்பை உள்ளிட்டவை, மாணவர் சேர்க்கை முடிந்ததும் வழங்கப்படும்.பள்ளிக்கு வரும் பெற்றோரை, உரிய சமூக இடைவெளி பின்பற்றி, வகுப்பறையில் அமர வைப்பதோடு, பள்ளி வளாகத்தை கிருமிநாசினி தெளித்து, சுத்தமாக வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி