பிளஸ் 2 மாணவர்கள் கல்வித்தகுதியை பள்ளிகள் வாயிலாக பதிவு செய்யலாம்: வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2021

பிளஸ் 2 மாணவர்கள் கல்வித்தகுதியை பள்ளிகள் வாயிலாக பதிவு செய்யலாம்: வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பு.

 

பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை பள்ளிகள் வாயிலாக நாளை (செப்.17) முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று வேலைவாய்ப்புத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்ட அறிவிப்பு:


10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை தாங்கள் படித்த பள்ளிகள் மூலம் https://tnvelaivaaippu.gov.in/ என்ற துறையின் இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நாளை (செப்.17) முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் படித்த பள்ளிகளிலேயே இணையதளம் வாயிலாக பதிவுசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இந்த வசதியை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம். அதேபோல், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி