School Morning Prayer Activities - 22.11.2022 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2022

School Morning Prayer Activities - 22.11.2022

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 22.11.2022

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல்

 அதிகாரம்:வாழ்க்கைத் துணை நலம்

குறள் : 57
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

பொருள்:
தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.


பழமொழி :

when you obey the superior, you instruct your inferior
முன் ஏர் போன வழியேதான் பின் ஏறும் போகும்


இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் பிறருக்கு வலது கையால் செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரியாமல் செய்வேன்.

 2. உதவி பிறரின் வருத்தம் போக்க, பிறர் என்னை புகழ அல்ல


பொன்மொழி :

"நேரம் என்பது ஒரு சிறந்த எழுத்தாளர். அது எப்போதும் சரியான முடிவை எழுதுகிறது. --சார்லி சாப்ளின்


பொது அறிவு :

1. நிலவில் ஏற்றப்பட்ட முதல் கொடி எந்த நாட்டினுடையது? 

 ரஷ்யா.

 2. உலகிலேயே அதிகமாக வெயில் அடிக்கும் இடம் எது? 

 


English words & meanings :

ate -past tense of eat, verb. சாப்பிட்டு விட்டேன். வினைச் சொல். eight - number 8. noun எண் எட்டு. பெயர்ச் சொல்.both homonyms.


ஆரோக்ய வாழ்வு :



பாதாமில் வைட்டமின் பி1, தயாமின், வைட்டமின் பி3 மற்றும் ஃபோலேட், வைட்டமின் பி9 போன்ற பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் இதை ஊட்டச்சத்து நிறைந்த பிரதான உணவாக கூறலாம்.  நல்ல கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ள பாதாம், ஒரு அவுன்ஸ் அதாவது 23 பாதாம் சாப்பிடும்போது, தாவர புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம், இரும்பு மற்றும் கால்சியம் ஆகியவற்றின் நன்மைகள் மற்றும் போதுமான இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்


NMMS Q

6, 13, _______, 33. 

விடை : 22. 

 விளக்கம்: 6+3 =9 ; 13+3 = 16; 33+3 = 36; மூன்றின் வர்க்கம் 9. 4 வர்க்கம் 16. 6ன் வர்க்கம் 36 என வந்துள்ளது. எனவே இடையில் உள்ள எண்ணானது ஐந்தின் வர்க்கமாக அமையும். ஆகையால் 25ல் மூன்றை கழித்தால் 22 கிடைக்கிறது.


நீதிக்கதை

பாசமுள்ள சிறுவன்

மாட்டுகாரன் ஒருவர் தன் பசுவோடு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அமைதியாக நடந்து வந்த பசு திடீரென அடம்பிடித்து நடு ரோட்டில் அமர்ந்து கொண்டது. சிறிய அளவிலான அந்த ரோட்டில் வாகனங்கள் எதுவும் செல்லமுடியாதபடி பசு நடுரோட்டில் படுத்திருந்தது. மாட்டுகாரன் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த பசுவை எழுப்ப முடியவில்லை. 

அந்த வழியாக ஒரு போலீஸ்காரர் வந்தார். தன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த லத்தியையும் வைத்து மிரட்டிப் பார்த்தார். மாட்டுகாரனுடன் சேர்ந்து பசுவை இழுத்துப் பார்த்தார். பசு அசையவில்லை 

அப்போது ஐஸ்கிரீம் விற்கும் நபர் ஒருவர் அந்த வழியாக வந்தார். குளிர்ச்சியாகப் பேசிப்பார்த்தார். நகராமல் இருந்த பசுவை மூவரும் சேர்ந்து இழுத்தனர். 

மல்யுத்த போட்டியொன்றில் வெற்றிபெற்று திரும்பிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் அந்த வழியாக வந்தார். ஒரு பசுவை ரோட்டிலிருந்து மூன்று பேர் நகர்த்துவதைப் பார்த்து நகைத்தார். மூன்று பேரையும் நகரச் சொல்லிவிட்டு மல்யுத்த வீரர் தனித்து மாட்டை இழுத்துப் பார்த்தார். பசு அசரவில்லை. 

அந்த வழியாக ஒரு சிறுவன் வந்தான். அவன் ரோட்டருகே வளர்ந்து நின்ற புற்களை பறித்து கட்டாக கட்டி பசுவிற்கு கொடுத்தான். பசு புல்லை சாப்பிட எழுந்தது. சிறுவன் புல்லை பசுவிடம் காட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். பசுவும் அவனோடு நகர்ந்தது. 

நீதி :
அன்பால் எதையும் சாதிக்கலாம்.


இன்றைய செய்திகள் - 22.11.22

* தமிழக அரசின் மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு.

* அரசு கேபிள் டிவி பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் உதவிக்கு துணை மேலாளர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

* தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 4000 முதல் 4500 பேருக்கு 'மெட்ராஸ் ஐ' பாதிப்பு.

* தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* ரூ.22,842 கோடி வங்கி மோசடி: ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்.

* இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிகடர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 44 பேர் பலியானதாகவும், 300 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* 2030-க்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம், பணி செய்யலாம் என நாசா தெரிவித்துள்ளது.

* ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.

* இந்திய கால்பந்து கிளப்கள் மீது சூதாட்ட புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சிபிஐ விசாரணை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

* விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர்: உலக சாதனை படைத்தது தமிழ்நாடு அணி.


Today's Headlines

* The Supreme Court again refused to ban the Tamil Nadu government's increase in electricity tariffs.

 * The Government of Tamil Nadu has announced that a temporary solution has been found to the issue of Government Cable TV and the public can contact the Deputy Managers for help.

* Every day 4000 to 4500 people are affected by 'Madras Eye' across Tamil Nadu.

* Chennai Meteorological Center has informed that there is a possibility of heavy rain in 6 districts of Tamil Nadu today and tomorrow.

* Rs 22,842 crore bank fraud: CBI files chargesheet against APG Shipyard founder

 * A powerful earthquake hit West Java, Indonesia yesterday. It scored a 5.6 on the recorder scale. According to reports, 44 people have died and 300 people have been injured so far in this earthquake.

 * NASA says humans could live and work on the moon by 2030.

 * Men's Tennis Championship - Djokovic wins the title.

* It has been reported that a case has been registered against Indian football clubs and the CBI investigation has started.

 * Vijay Hazare Cup Cricket Series: Tamil Nadu team set a world record.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி