பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பின் பணிநிரவல், பொது கலந்தாய்வு நடத்த வேண்டும் என உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தேனி மாவட்ட தலைவர் மோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது: பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிறைவடைந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் கலந்தாய்வு நடத்த தேவையில்லை. மேலும் 2011 செப்.,27 க்கு முன் பணியமர்த்தப்பட்ட பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் பழைய முறையில் பதவி உயர்வு வழங்கலாம் என்ற நிலை ஏற்பட்டால் அதிக காலிப்பணியிடங்கள் ஏற்படும்.
அதனால் பணிநிரவல், கலந்தாய்வினை உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பின் நடத்த வேண்டும், என்றார்.
அய்யா என்றைக்கு தீர்ப்பு வர என்றைக்கு பதவி உயர்வு வர எப்ப கலந்தாய்வு நடக்க விடியல் அரசு முடிந்து விடும் 2 வருடங்கள் ஆகும்
ReplyDeleteஉங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்
ReplyDeleteஉச்ச நீதிமன்றமத் தீர்ப்பு 30 நாட்களில் வந்து விடும் என நம்பத் தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
ReplyDeleteநிச்சயமாக வராது
ReplyDeleteபி.எட் மற்றும் டீச்சர் ட்ரெயினிங் படித்துள்ள ஆசிரியர்கள் வீட்டுக்கு வீடு இருக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சியில் இன்னும் ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூட நிரப்ப வில்லை. இடைநிலை ஆசிரியர் நியமனம் ஏதும் செய்ய வில்லை. பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்ய வில்லை. ஆனால் தேர்தல் வாக்குறுதி அளித்தார். எங்கும் தற்காலிக ஆசிரியர் நியமனம் மட்டுமே செய்கின்றனர்.
ReplyDelete